என்னை கவிஞனாக்கிய உனக்கு
ஏனோ
காதலனாக்க மனம் வரவில்லை........
Wednesday, July 29, 2009
Tuesday, July 28, 2009
மழை
"எனக்கு மழையில் நனைதல் பிடிக்கும்"
என்று நீ சொல்லியதிலிருந்து
மழை வரும்போதெல்லாம் வெளியே செல்கிறேன்
நனைவதற்காக அல்ல
உன்னை நினைப்பதற்காக........
என்று நீ சொல்லியதிலிருந்து
மழை வரும்போதெல்லாம் வெளியே செல்கிறேன்
நனைவதற்காக அல்ல
உன்னை நினைப்பதற்காக........
Monday, June 8, 2009
Wednesday, April 1, 2009
Friday, March 27, 2009
கணினி
அன்று,காற்று என்ற மூன்றெழுத்தில்
மூச்சு விட்டுக்கொண்டிருந்த உலகம்
இன்று, கணினி என்ற மூன்றெழுத்தில்
மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது....
மூச்சு விட்டுக்கொண்டிருந்த உலகம்
இன்று, கணினி என்ற மூன்றெழுத்தில்
மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது....
தாய்
தாயின் பத்து மாதக் கடனை
எப்படி அடைப்பதேன்று
யோசித்துக்கொண்டே இருக்கிறேன்
ஏறிக்கொண்டே இருக்கிறது
வட்டி ................
எப்படி அடைப்பதேன்று
யோசித்துக்கொண்டே இருக்கிறேன்
ஏறிக்கொண்டே இருக்கிறது
வட்டி ................
காதல்
இப்போதெல்லாம் நான்
பேருந்தில் ஊனமுற்றோர் இருக்கையில் தான்
அமர்கிறேன்.
என் இதயம் என்னிடம் இல்லை..........
பேருந்தில் ஊனமுற்றோர் இருக்கையில் தான்
அமர்கிறேன்.
என் இதயம் என்னிடம் இல்லை..........
தமிழன்
உயிர் இழந்த ஒவ்வொரு
இலங்கை தமிழனையும் நினைத்து
உறக்கம் இழக்கிறேன்
தமிழனாக இருப்பதனால் மட்டுமல்ல
மனிதனாக இருப்பதாலும் ...........
இலங்கை தமிழனையும் நினைத்து
உறக்கம் இழக்கிறேன்
தமிழனாக இருப்பதனால் மட்டுமல்ல
மனிதனாக இருப்பதாலும் ...........
Subscribe to:
Comments (Atom)